சிறைக்கைதிகளின் புனர்வாழ்வுத் திட்டம்
"உன் பார்வையை விரிவாக்கிப் பார்த்தால் ஒவ்வொரு குற்றவாளிக்குள்ளும் ஒரு பாதிக்கப்பட்டவர் இருந்துகொண்டு உதவிக்காக அழுது கொண்டிருப்பார். நீ அந்த பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தினால், இந்த கோள் கிரகத்திலிருந்து குற்றத்தை நீக்கிவிடுவாய்" - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஒவ்வொரு குற்றவாளியினுள்ளும் இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு உதவுதல்
சிறைக் கைதிகள் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ளும் பொருட்டு ஸ்ரீ ஸ்ரீ 1990 ல் சிறைத் திட்டத்தை ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் மனித நேயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சுய முன்னேற்ற பயிலரங்கமும், சிறிய நிதி சலுகைகளும் மற்றும் தொழிற் பயிற்சியும் ஆகும். இந்தத் திடடம் சட்ட அமலாக்க அலுவலர்களுக்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
தைவானிலுள்ள "தைபெய் து -சென்" சிறை மற்றும் "தைசுங்" சிறையில் நடைபெற்ற சுய முன்னேற்ற சிறை நிகழ்ச்சியில் பங்கேற்ற 604 பேர்களிடம் ஆராய்ந்தபொழுது பாதிக்கும் மேற்பட்ட பங்கேற்றவர்கள் கோபம்,மன அழுத்தம், பயம், உறக்கமின்மை போன்ற எதிர் மறையான உணர்வுகளில் குறிப்பிடத் தக்க மாற்றம் இருப்பதாக அறிவித்தனர்.
இந்தியாவின் சில மிக மோசமான குற்றவாளிகளின் வீடான திஹார் சிறையில், கைதிகள் புனர் வாழ்வுப் பணி, 1999 ல்தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி திஹாரிலுள்ள மொத்தம் 17, 8 சிறைகளில் செயல்பட்டு வருகிறது. 30000 க்கும் மேற்பட்ட கைதிகள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
நியூ சிலாந்தில் இளைஞர் நீதிப் பிரிவுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மலாவி ஹசிலி சிறையில் இந்த நிகழ்ச்சி ஆச்சரியப் படத் தக்க வகையில் பலன்களை பார்த்தது. அரேபியாவில் அல் வத்பா பெண்கள் சிறையில், இந்த நிகழ்ச்சி வரவேற்கப்பட்டது. டென்மார்க்கில், ஒரு திருப்புமுனையாக அமைந்த தீர்மானத்தில், நீதித் துறை அமைப்பு இளைஞர் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பாமல், அவர்களை வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கட்டளையிட்டது. பிஜி, கொசோவோ, மற்றும் ஈராக்கில் எல்லா பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தாய்வானின் "ஆப்டர் கேர் கூட்டமைப்பு" இந்த அமைப்பின் முயற்சிகளை 2005 ல் அங்கீகரித்தது.
சமீபமாக, இந்த அமைப்பு ஸ்ரிஜன் (கைதிகளுக்கு சமூக புனர்வாழ்வுப் பணி மற்றும் வறுமையில் இருப்பவர்களுக்கு உதவி) என்னும் புது முயற்சியை அறிமுகப்படுத்தியது. ஸ்ரிஜன் சிறைக்கைதிகளுக்கு திரையரங்கம், பாட்டு, நடன அரங்குகள், ஆளுமை முன்னேற்றம் முதலியவற்றில் வாய்ப்புக்களை அளிக்கிறது. இந்த புது மயற்சி, வர்த்தகக்கலை, உடை, நகை, அலங்கார தொழில் நுட்பம்,மற்றும் நெசவு முதலிய தொழில்முறை பயிற்சிகளை அளிக்கிறது மூன்று ஸ்ரிஜன் பயிலரங்குகள் நியு டெல்லி, இந்தியாவில் சமீபமாக நடைபெற்றன. அதில் சிறைக்கைதிகளுக்கு அலுவலக பொருட்கள், பரிசுப் பெட்டிகள், விளக்குகள் முதலியவற்றை உருவாக்க பயிற்றுவிக்கப்பட்டது.
இந்த அமைப்பு உள்ளூர் அரசை சேராத நிருவனங்களுடனும் மற்றும் பங்குதாரர்களோடு இணைந்து இந்த கைவினைப் பொருட்களை இந்தியா, மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. எல்லா லாபமும் கைவினைத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு, அவர்களை சுதந்திரமாக இருக்கச் செய்கிறது.
- போல்ல்ச்மூர் சிறைச்சாலை (தென் ஆப்ரிக்கா) கைதி
- திரு கொம்ளிகோவ், ராணுவ தலைவர், ரஷ்யா
- இளைஞர், லொஸ் அன்கேலேஸ் இளைஞர் மையம்
- அசோக் சௌதரி, மாநில அமைச்சர், சிறை துறை, பீகார்.
- கிரண் பேடி, முன்னாள் இன்ஸ்பெக்டர் திகார் சிறை, முன்னாள் போலீஸ் இணை ஆணையாளர்.
- முன்னாள் தீவிரவாதி, உதம்பூர் சிறை, ஜம்மு & காஷ்மீர், இந்தியா.
- நிலூபர், பைகுல்லா சிறை , மும்பை இந்தியா.
- பியூர் சிறை, பீகார், இந்தியா.